Author: ஜோசப் பால்ராஜ்
•8:27 PM
இது தான் உன் முடிவா?

ம்ம்ம்ம்

ஏன் திடீர்னு இப்டி ஒரு முடிவு?

திடீர்னு எல்லாம் இல்ல , ரொம்ப நாளாவே நினைச்சுக்கிட்டு இருந்ததுதான்.

இல்ல, இவ்ளோ நாள் இல்லாம இந்த நேரத்துலயா இத செய்யனும்?

இது தான் சரியான நேரம் , இப்ப செஞ்சாதான் நல்லாருக்கும்

கள நிலம தெரியாம நீ இந்த முடிவுக்கு வந்துட்டியோன்னு தோணுது..

என்ன கள நிலைமை , எப்பவும் வழக்கமா இருக்க நம்ம ஆட்கள் தானே இப்பவும் இருக்காங்க , இப்ப மட்டும் கள நிலைமை என்ன புதுசா மாறிடுச்சு? வானத்துலேருந்து எல்லாம் யாரும் குதிச்சுரலைல்ல? சொல்லப் போனா என்னைய பார்த்து தான் எல்லாரும் பயப்படனும்.
ஏன் நான் மட்டுமா புதுசா இறங்குறேன், இதுவரைக்கும் வராத நிறையா பேரு இப்ப வரலையா?

அப்போ எல்லாரும் வர்றாங்க, அதுனால நானும் போறேன்னு போறியா நீ?

நெவர், என்னால முடியும்னு நினைக்கிறேன், அதான் இறங்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

புலியப் பார்த்து பூனை சூடு போட்ட மாதிரின்னு பேர் வந்துடாது?

ஹேய் லுக், என்னைய தேவையில்லாம பழமொழியெல்லாம் சொல்லி டிஸ்கரேஜ் பன்னாத, பூனையோட பரிணாம வளர்சிதான் புலி. நான் என்ன கடைசிவரைக்கும் பூனையாவே இருக்கணும்னு சொல்றியா?


இல்லப்பா, நீ கோபப்படாத, எதிராளிங்க எல்லாம் பழம் தின்னு கொட்டைப் போட்ட ஆளுங்க. அதுனாலத்தான்....

அதுனால? ஸோ வாட் யா? இப்ப தென்சென்னையில சரத் பாபு துணிச்சலா களமிறங்கல? எதிராளிங்க எல்லாம் அரசியல் கட்சியில இருக்கவங்க, தொண்டர், குண்டர் படை, அதிகாரம், பணம் எல்லாம் உள்ளவங்க அப்டின்னு அவரு யோசிச்சாரா? இல்லைல ? துணிஞ்சு இறங்குனாருல்ல? அப்டித்தான் நானும் துணிஞ்சு இறங்குறதுனு முடிவு செஞ்சுட்டேன்.

சரி, நீ சொன்ன சரத் பாபு வெற்றிபெறலையே? அப்ப நீ தோக்கப் போறோம்னு தெரிஞ்சே இறங்கப் போறியா?

ஹே, கமான் யா, லெட் மீ ட்ரை. முத தடவையே வெற்றியடையும்னு இல்லைல. இங்கயே உக்காந்திருந்தா எப்டி? முதல்ல இறங்கிப் பார்ப்போம். அப்பறம் வெற்றியப் பத்தி யோசிக்கலாம். குறைஞ்சது ஒரு போட்டி அனுபவமாச்சும் கிடைக்கும்ல?

இருந்தாலும் களத்துல இருக்கவங்களோட பிண்ணணியெல்லாம் என்னான்னாவது தெரிஞ்சுகிட்டு செய்யலாம்ல ?

எல்லாரும் ஏற்கனவே இதுல அனுபவம் உள்ளவங்க, பத்திரிக்கைகள்ல எல்லாம் அவங்க புகழ் பரவியிருக்கு, அதத் தானே சொல்ல வர்ற?

ஆமா.

அவங்களும் என்னைய மாதிரி ஒரு நாள் புதுசா ஆரம்பிச்சவங்க தானே? இறங்குன உடனே அவங்க எல்லாம் பத்திரிக்கையில வந்துட்டாங்களா என்ன? நான் இப்ப தொடங்குற மாதிரி தானே அவங்களும் ஒரு நாள் தொடங்கியிருப்பாங்க?

சரி, இதுக்கு மேல நான் சொல்றத நீ கேக்க மாட்ட, உரையாடல் சிறுகதை போட்டிக்கு கதை அனுப்புற உன் முடிவுல இருந்து மாறமாட்ட. வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா.

நன்றி டா.

டிஸ்க்கி:
1. உரையாடல்னு சிறுகதை போட்டி வைச்சுருக்கதுனால எனக்கும் என் மனசாட்சிக்கும் இடையே நடந்த உரையாடலையே கதைங்கிற பேர்ல எழுதிட்டேன்.

2. கதை எழுத நானும் முயற்சி செஞ்சேன் அப்டின்னு வரலாற்றுல பதிச்சாச்சு.( வரலாறு முக்கியம்ல)

என்னடா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லன்னு கேட்கிறவங்களுக்கு

அதான் எனக்கும் என் மனசாட்சிக்கும் நடந்த உரையாடல்னு சொல்லிட்டேன்ல, மனசாட்சியே இல்லாம எப்டி அதோட உரையாட முடியும்? ???
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•8:41 PM
ரொம்ப நாளவே இந்த விளையாட்டு நடந்துக்கிட்டேத்தான் இருக்கு. ஆனா நம்மல யாரும் கூப்பிடல. ஏன் என்னைய யாரும் கூப்பிடலன்னு ஒரு சிலர கேட்டேன். ஒருத்தரு சொன்னாரு நீங்கள்லாம் பெரிய ஆளு, உங்களையெல்லாம் முன்னாடியே வேற யாராச்சும் கூப்பிட்டுருப்பாங்கன்னு நினைச்சுத்தான் கூப்புடாம விட்டுட்டோம்னாங்க. ஆகா, இந்த உலகம் இன்னமும் நம்மல நம்புதேன்னு விட்டுட்டேன். ஒருவழியா நம்மளையும் ரெண்டு பேரு கூப்புட்டுட்டாங்க. களத்துல இறங்கிட்டேன்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அ.ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ் இதுதான் என்னோட முழுப் பெயர். ஜோசப் என்பது எங்கள் குடும்பத்துல எங்க தலைமுறையில இருந்து எல்லாருக்கு வைச்சுருக்க பொது பெயர், வீட்ல மொத்தம் 8 ஜோசப் இருக்கோம்.

கிறிஸ்தவர்களில் புனிதர்கள் என்று ஒரு சிலர் இருப்பார்கள்.அவர்களது பிறந்த தினங்களை அவர்களது Feast என கொண்டாடுவது வழக்கம், நான் பிறந்த ஜூலை 11 ஆம் நாள் புனித பெனடிக்ட் அவர்களின் Feast. இதனால் என் பெயருடன் பெனடிக்ட் சேர்ந்து கொண்டது.

நான் பிறந்த வருடம் தான் முந்தைய போப் 2 ஆம் ஜான் பால் அவர்கள் போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். எனவே பால் என்பதும் என் பெயரில் சேர்ந்துவிட்டது. ஜோசப் பெனடிக்ட் பால் அப்டின்னு இருந்தா நல்லாருக்காதுன்னு ராஜ் அப்டிங்கிற பெயர் எச்ச விகுதிய சேர்த்து முழுப் பெயரையும் உருவாக்கிட்டாங்க.

இவ்ளோ நீளமான பெயரா இருக்கதால விண்ணப்ப படிவங்கள்ல எல்லாம் எழுத சிரமப்பட்டாலும், எல்லாத்துக்கும் பொருத்தமான விளக்கமிருப்பதால் என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

30.4.2009 நள்ளிரவுல இருந்து இன்று வரை , தினமும் என் தந்தையின் மறைவை நினைத்து நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் .

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். காரணம் என்னான்னா வேற யாருக்கும் என் கையெழுத்து புடிக்காது. புரியிற மாதிரி எழுதுனாத்தானே புடிக்கிறதுக்கு.

4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் ஆச்சாரமான அசைவ குடும்பத்துல பொறந்தவன். கொஞ்சமாச்சும் அசைவம் இருந்தா நல்லாருக்கும். ரொம்ப புடிச்சது ஆட்டிறைச்சி, ஆனா சிங்கப்பூர்ல கிடைக்கிறது ஆஸ்த்ரேலியால இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி, அது அவ்ளோ நல்லா இருக்காது. அதுனால அதிகமா சாப்புடுறதில்ல. கோழி, மீன் இதெல்லாம் ரொம்ப புடிக்கும்.
தயிர் சாதம் ரொம்ப புடிக்கும்.

இதே காலை உணவுன்னு கேட்ருந்தா என்னோட பதில் மொதல் நாள் வடிச்ச சோறுல தண்ணி ஊத்தி அடுத்த நாள் காலையில அதுல தயிர் ஊத்தி, சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டு , சுண்ட வைச்ச பழைய குழம்போட , மோர் மிளகா வத்தல் வறுவல் வைச்சுக்கிட்டு, வயகாட்டு வரப்புல தண்ணி ஓடிக்கிட்டு இருக்க வாய்கல்ல கால வைச்சுக்கிட்டு உக்காந்து சாப்புடுறதத் தான் சொல்லுவேன். இந்த உலகத்துல எங்க போய் என்ன சாப்புட்டாலும் இதுக்கு ஈடா ஒன்னு வராது. அனுபவிச்சவங்களுக்குத்தான் அதோட அருமை தெரியும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

எல்லாருகிட்டயும் உடனே நல்லா பேசிருவேன், ஆனா எதிராளி எப்டி பழகுறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் அவங்களோட நட்பா இல்லையான்னு முடிவு செய்வேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி, கடல் , பாத்ரூம் என எங்கயா இருந்தாலும் குளிக்க புடிக்கும். ரொம்ப புடிச்சது எங்க ஊர்ல ஆத்துல எதிர் நீச்சல் போட்டு குளிக்கிறது தான்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

இதத்தான் பார்கணும், இதத் தான் பார்ப்பேன்னு இதுவரைக்கும் எந்த வரைமுறையும் வைச்சுக்கிட்டதில்ல. பெரும்பாலும் கண்களப் பார்த்து பேசுவது உண்டு.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது : தெரியலை, எனக்கு என்னைய ரொம்ப புடிக்கும், எத சொல்றதுன்னு தெரியல.
பிடிக்காதது: சோம்பேறித்தனம், எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பி ஏமாறுறது, ஏமாத்துறான்னு தெரிஞ்சும் சிலருக்கு உதவி இ.வான்னு பேர் எடுக்கிறது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

தெரியலைன்னு சொல்றது சரியா இருக்கும். இந்த கேள்விய நான் சாய்ஸ்ல விடுறேன்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என்னைய வளர்த்த என் வாத்தியார் தாத்தா நான் நல்லபடியா வேலையில இருக்கத பார்க்க கூட இல்லையேன்னு வருத்தம் இருக்கு & அப்பா....

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வீட்டில் இருப்பதால் வெண்நிற அரை கால்சட்டையும், சாம்பல் நிற பனியனும்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் மடிக்கணிணியின் திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ( திரையப் பார்க்காம என்னால தட்டச்சு செய்ய முடியாதுங்க)
அண்ணண் மகள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நான் இப்டியே இருந்துட்டுப் போயிடுறேனுங்க, எதுக்கு என்னைய போயி பேனாவா மாத்துறீங்க, அப்டியெல்லாம் மாத்துனா எழுதுறவங்க கட்டுப்பாட்ட மீறி நானு எழுதிக்கிட்டேயிருப்பேனாக்கும். சரி மாத்துறதுனா சிவப்பு நிற பேனாவா மாத்துங்க.

14.பிடித்த மணம்?

மழை பெய்ய ஆரம்பிக்கும் போது வரும் மண் வாசனை, நெற்பயிர் கதிர்விடும் போது வயல்வெளியெங்கும் உள்ள வாசனை, சேற்று உழவு செய்யும் போது வரும் மணம், கடலைய சட்டியில போட்டு தீயாம வறுக்கும் போது வரும் வாசம் , இப்டி சொல்லிக்கிட்டே போகலாம், அது ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

திவ்யா - சிறந்த கதாசிரியர் , அருமையான நண்பர்
சென் - என் வகுப்புத் தோழன், ஆருயிர் நண்பண்
ஜெகதீசன் - சிங்கை பதிவர், அன்புத் தோழர்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?


லதானந்த் மாமா அவர்களின் அனைத்துப் பதிவுகளிலும் உள்ள நகைச்சுவையும்,கொங்கு தமிழும் , துறைசார்ந்த பதிவுகளில் பல நல்ல விசயங்களை எல்லோருக்கும் புரியும் படி எளிமையாக சொல்லுதலும்.

ரெங்காவின் கவிதைகளும், பட்டாம்பூச்சி சொல்லித்தந்ததும்

17. பிடித்த விளையாட்டு?

இறகு பந்து, கூடைப் பந்து, கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட்( ஓரளவுக்கு)

நீச்சல் ( இதையும் விளையாட்டுல சேர்கலாம்ல??)

18.கண்ணாடி அணிபவரா?

அது ஆச்சு 10 வருசம். பொட்டித் தட்டுற வேலையில இருக்கதுனால கண்ணாடி அணிய வேண்டியது மிக அவசியமாயிருச்சு.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைசுவையானப் படங்கள் குறிப்பாக கமல் நடித்த நகைச்சுவைப் படங்கள் ( வசூல் ராஜா, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்மந்தம், நள தமயந்தி போன்றவை)

மனசுக்கு கஷ்டம் தராத சுபமான முடிவுகள் கொண்ட படங்கள் புடிக்கும்

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன் படம் திரையரங்கில் பாதி பார்த்துக்கிட்டு இருக்கப்ப தான் அப்பா இறந்த செய்தி வந்தது
கடைசியா முழுசாப் பார்த்த தமிழ் படம் : ஜெயங்கொண்டான்

அப்பறம் இடையில வாண்டட் அப்டின்னு ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன், வளைச்சு வ்ளைச்சு சுடுறது, ஒரு குண்ட வளைச்சு அடிச்சா வட்டமா நிக்கிற எல்லாரையும் ஒரே குண்டு கொன்னுட்டு , சுட்டவங்களையும் சாய்க்கிது. இந்தமாதிரி படம் எல்லாம் MLA விசயகாந்த இல்லன்னா MP தானை தலைவன், அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் தவிர வேறு யாராலும் தமிழில் எடுக்க இயலாது.

21.பிடித்த பருவ காலம் எது?

எல்லாக் காலமும் பிடிக்கும். இதுல எல்லாம் எந்த சிறப்பு விருப்பமும் இல்லீங்க.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

மதன் எழுதிய கி.மு கி.பி

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

இரு அண்ணண்களின் பிள்ளைகளையும் நான் வைத்திருக்கும் படம் தான் என் கணிணியில் இருக்கும் , அதை மாற்றுவதில்லை. இரண்டு பேரும் மறுபடியும் ஒன்னா பார்குறப்ப புதுசா படமெடுத்த பின்னாடிதான் மாத்தனும்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : குழந்தைங்க பேச்சுல ஆரம்பிச்சு நிறையா இருக்கு
பிடிக்காதது: தேவையில்லாத கோபத்தின் போது வந்து விழும் எந்த வார்த்தைகளின் ஓசையும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

Air Distance - 2881.5 KM ( தஞ்சாவூர் - சிங்கப்பூர்).

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிதி மேலாண்மை & ஆலோசனையளித்தல்
ஒருங்கிணைத்தல்
மனச் சோர்வுள்ளவர்களுக்கு கவுன்சிலிங் செய்வது

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கடவுள் பார்த்துக்குவாரு விடுன்னு சொல்றத என்னால ஏத்துக்கவே முடியாது.
கடவுள் மேலயே எல்லாத்துக்கும் பாரத்த போட கூடாது. நாம செய்யவேண்டியத நாம தான் செய்யனும்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பொசுக்கென்று வரும் கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மலைப் பிரதேசங்கள் எதுவாயிருப்பினும் பிடிக்கும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிஞ்சளவு உழைக்கணும், உழைப்புக்கேற்ற வளர்சி இருக்கனும், என் மறைவிற்கு பிறர் வருந்தும் அளவுக்கு சிறப்பா வாழணும்.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தெரியல, இதையும் சாய்ஸ்ல விடுறேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

"Nothing is Impossible, Nothing Is Difficult, Everything is a challenge"
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 AM
A

B

C

D

E

F

G

H

I

J

K

L

M

N

O

P

Q

R

S

T

U

V

W

X

Y

Z

அவர  நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் அப்டியே 
இவரையும் நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்.



Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•8:53 PM
இலங்கை அரசால் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளை தயவு செய்து நம்பவோ பரப்பவோ செய்யாதீர்கள்.

இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்து இதுபோல ஆயிரம் முறை அவரை இது போல் கொன்றுள்ளார்கள் வெறும் செய்தியில் மட்டும். இது சர்வதேச சமுதாயத்தை திசை திருப்பும் ஒரு செயல் என்றே படுகின்றது.

இத்துனை நாள் போராடியவர் இப்போதா தப்பிச் செல்லப் போகின்றார்? யோசிக்க வேண்டிய நேரமிது. அஞ்சலிப்பதிவு எழுதும் நேரமல்ல.

எனவே அனைவரும் அமைதி காப்போம். நல்லதே நடக்க நம்மால் இயன்றவற்றை செய்வோம்.
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•9:37 PM
சில காலங்களுக்கு முன்பு வரை கிராமப்புறங்களுக்கு ஏதாவது அவசர செய்திகளை அதிலும் குறிப்பாக மரண செய்திகளை சொல்ல மட்டுமே பயன்பட்டு வந்த தகவல் தொடர்பு முறைதான் தந்தி. சமீபகாலத்தில் செல்லுலார் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்த பின்னர் தந்தி சேவையின் தேவை மிக மிக குறைந்து போயிருந்தது.

ஆனால் சமீபத்தில் ஈழப் போரை நிறுத்தக் கோரி பல முறை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்(???), வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி என பலருக்கும் அடிக்கடி தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் அடிக்கடி தந்தி அனுப்பி வந்தது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. தான் மட்டுமின்றி கட்சிக்காரர்கள், தமிழக மக்கள் அனைவரையும் வேறு தந்தி அனுப்பி போராட்டம் நடத்தி அழிந்து வரும் தந்தி சேவையை காப்பாற்றவும் செய்தார் என்பதும் நாம் அறிந்த ஒன்று.

மின்னஞ்சல் சேவை மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகிய பின்னர் கடிதம் எழுதுவதும் மிக அரிதாகி கொண்டே இருந்த நிலையில் உயிர் போகும் பிரச்சனையாக இருந்தாலும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுவேன் என்ற தனது உறுதியான கொள்கையால் பல கடிதங்களும் எழுதி கடித சேவையையும் காப்பாற்றியுள்ளார்.

தபால் மற்றும் தந்தி சேவை ஆகியவை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் வரும் அமைப்புகள் என்பதால் தொலை தொடர்பு அமைச்சகம், அழிந்து வரும் தபால் தந்தி சேவைகளை காப்பாற்ற கருணாநிதி அவர்கள் செய்துவரும் மாபெரும் சேவைகளைப் பாராட்டி ஒரு பெரிய பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் தற்போது இவ்விழாவை நடத்த இயலாது என்பதால் தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை நீங்கள் காப்பாற்றுகிறேன் என எடுத்த முயற்சிகள் அவர்களை காப்பாற்றியதோ இல்லையோ, அழிந்து வரும் தபால் மற்றும் தந்தி முறைகளை காப்பாற்றியுள்ளது மிகவும் பாராட்டத் தக்கதே.

வாருங்கள் முதல்வரை பாராட்டுவோம்.
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•2:04 PM

நம்ம குசுமபன் இன்று திருமண வாழ்வின் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறான்.


அய்யனார் தம்பதியருக்கும் இன்று திருமண நாள்.

வாங்க தம்பதிகளை வாழ்த்துவோம்.


என் அன்பு நண்பண் சரவணவேல் & மஞ்சு எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•9:29 PM

நாடளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. ஓட்டுப் போடுவது மட்டும் தான் வாக்காளர்களின் கையில் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம். ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒழுங்காக தேர்தல் நாளன்று நமது ஓட்டை பதிவு செய்கிறோம்?

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் என்று விளம்பரம் செய்தாலும் கூட தேர்தல் அன்று கிடைக்கும் விடுமுறையை வீட்டில் இருந்து அனுபவிக்கத்தான் மனமிருக்குமே தவிர ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போட மனம் வராது. இந்தியாவில் வெளிமாநிலத்தில் வேலை பார்ப்பவர்கள், வெளியூரில் வேலைப் பார்ப்பவர்கள் கூட தங்களுக்கு வாக்குரிமை இருக்கும் ஊரில் தேர்தல் நடைபெறும் நாளில் அங்கு சென்று ஓட்டளிக்க எத்தனைபேருக்கு மனம் வரும்?

துபாயில் வேலை பார்க்கும் ஒருவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் வெறும் இரண்டே நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்து செல்ல இருக்கிறார் என்றால் அதை நம்ப சிறிது சிரமமாகக் கூட இருக்கலாம். ஆனால் அபி அப்பா அதை செய்ய இருக்கிறார்.

அவர் எந்த கட்சிக்கு ஓட்டளித்தாலும், ஓட்டளிக்க வேண்டும், தனது ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக விமானக் கட்டணம் மட்டும் 13 ஆயிரம் இந்திய ரூபாய்கள் செலவு செய்து வர இருக்கிறார்.
ஓட்டுரிமையை நிலைநாட்ட என்றே தாய்நாட்டிற்கு வருகை தர இருக்கும் அபி அப்பா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஊரில் இருக்கும் நண்பர்களே மறக்காமல் ஓட்டுப் போடுங்கள். உங்கள் உரிமையை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்காதீர்கள். துபாயில் இருந்து வந்து ஓட்டளிக்க இருக்கும் அபி அப்பாவின் செயலை பார்த்து குறைந்தது நான்கு பேராவது தங்கள் கடமையைச் செய்தால் அது அவருக்கு நாம் சொல்லும் சிறந்த வாழ்த்தாக இருக்கும்.


எல்லாம் சரி நீ எப்டின்னு என்னையப் பார்த்து கட்டாயம் என் மாப்பி சஞ்சய் கேட்பாரு. எனக்கு இன்னும் ஓட்டுப் போடுற வயசு வரல மாப்ளன்னு சொன்னா நீ நம்ப மாட்ட. சரி உண்மையச் சொல்லிடுறேன், 2004 தேர்தல்ல இருந்தே என் பெயர் வாக்காளர் பட்டியல்ல இல்ல. 2004 தேர்தலப்போ சென்னையில இருந்து ஓட்டுப் போடுறதுக்காக எங்க ஊருக்குப் போயிட்டு ஓட்டுப் போட முடியாம வந்தேன், அதுக்கு அப்றம் நான் இங்க வந்துட்டதுனால என் பெயர் சேர்க்கப்படாமலே போயிருச்சு. அதுனால நான் வந்தாலும் ஓட்டுப் போட முடியாது. ( சஞ்செய்ய வம்பிழுத்தாச்சு.)

ஒழுங்கா பதிவு எழுதப் போறியா இல்லையான்னு என்னைய மிரட்டிய அன்புத் தங்கை தூயாவிற்கு நன்றிகள். நம்ம வலைப்பூவ அருமையா வடிவமைச்சதும் தூயா தான்.

ராயல் சல்யூட் அப்டிங்கிற வார்த்தைய தமிழ்படுத்த தெரியல.அதனால் அப்படியே ஆங்கில வார்த்தைய உபயோகிச்சுடேன், தமிழ் ஆர்வலர்கள் என்னை மன்னிக்கவும்.
Links to this post
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க